ஆலந்தூர்: உள்ளகரத்தில் கல்லூரி மாணவிக்கு டெங்கு அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உள்ளகரம், குபேர முனுசாமி தெருவை சேர்ந்த 18 வயதுடைய கல்லூரி மாணவி, கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது மாணவிக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.இதனை அடுத்து உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தகவலறிந்த பெருங்குடி மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள், உள்ளகத்தில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.