சேலம்: ஏற்காட்டில் பெய்யும் தொடர் மழையால், அடிவாரத்தில் உள்ள கற்பகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விவசாயிகளை மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில், ெதாடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளது. இதை ஏற்காட்டுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். ஏற்காடு மலைப்பாதையில் வழிந்தோடும் மழைநீர், அடிவாரத்தில் உள்ள மன்னார்பாளையம் கற்பகம் கிராமத்திற்கு வருகிறது. இங்குள்ள சுற்றுப்புற கிராமங்களின் நீர்வழித்தடத்தில், புது வெள்ளமாய் பாய்ந்து ஓடுகிறது. இதை காண பலர் குடும்பத்துடன் வருகின்றனர். மேலும், அங்குள்ள தடுப்பணையில் சிறுவர்கள் உற்சாக குளியல் போடுகின்றனர். இங்கு வழிந்தோடும் மழைநீர், புதுஏரிக்கும் வந்து கொண்டிருக்கிறது. இதனால் புது ஏரி நிரம்பி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.