திருப்பூர்: திருப்பூரில் தரமற்ற உணவு தயாரித்த உரிமம் மற்றும் பதிவு இல்லாத 32 விடுதிகளுக்கு உணவு பாதுகாப்புதுறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்படும் உணவு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை உத்தரவின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி விடுதிகளில் நியமன அலுவலர் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் 64 விடுதிகளில் ஆய்வு செய்யப்பட்டதில் 32 விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
பள்ளி, கல்லூரி விடுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு: தரமற்ற உணவு தயாரித்த 32 விடுதிகளுக்கு நோட்டீஸ்
- உணவு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்
- பள்ளி
- கல்லூரி விடுதிகள்
- மாணவர் விடுதிகள்
- உணவு உணவு பாதுகாப்பு அதிகாரிகள்