சென்னை: தாயின் ஜாக்கெட்டை கிழித்து மானபங்கம் படுத்திய ரவுடியை வெட்டி கொன்றோம் என்று அவனை கொலை செய்ததாக கைது ெசய்யப்பட்ட சகோதரர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலை அருகே உள்ள கெனால் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் அரி(எ)அறிவழகன்(25). ரவுடியான இவர் மீது திருவல்லிக்கேணி, ஜாம்பஜார், அண்ணாசதுக்கம் மற்றும் மெரினா காவல் நிலையங்களில் கஞ்சா கடத்தல், திருட்டு, வழிப்பறி மற்றும் கொலை வழக்குகள் உள்ளன.கடந்த 20ம் தேதி வீட்டில் கஞ்சா போதையில் தனியாக இருந்த அறிவழகனை ஆட்டோவில் வந்த கும்பல் சரமாரி வெட்டி கொன்றது. இதுகுறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான வினோத் மற்றும் பாலாஜி ஆகியோர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து இருவரையும் செல்போன் சிக்னல் உதவியுடன் அரியலூரில் ேநற்று முன்தினம் கைது செய்தனர்.பின்னர் சகோதரர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:திருவல்லிக்கேணியில் பிரபல ரவுடியாக வலம் வந்த பல்பு குமாருக்கும் கொலை செய்யப்பட்ட அறிவழகன் ஆதரவாளர்களான அறிவழகன் சகோதரர் சொறி விஜய், கைப்புள்ள(எ) பிரவீன், பிரசாந்த், கர்லிங், முருகன் ஆகியோருக்கும் மெரினா கடற்கரையில் வழிப்பறி மற்றும் கஞ்சா விற்பனையில் தொழில் போட்டி இருந்து வந்தது. இது நாளடைவில் தகராறாக மாறி ரவுடி பல்புகுமாரை அறிவழகன் தனது தம்பி சொறி விஜய் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் ேசர்ந்து வெட்டி படுகொலை செய்தனர். இதனால் பல்புகுமார் ஆதரவாளர்களான வினோத், பாலாஜி தரப்பினர், அறிவழகன் மற்றும் அவரது தம்பி சொறி விஜய்யை கொலை செய்ய முடிவு செய்திருந்தனர். பல வழிகளில் பலமாக இருந்த அறிவழகன் தரப்பை இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பல்புகுமார் கொலை வழக்கில் சொறி விஜய் தற்போது புழல் சிறையில் உள்ளான்.