சென்னை: சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் தனியார் பயணிகள் விமானம் நேற்று காலை 7.20 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 78 பயணிகள், 5 விமான சிப்பந்திகள் என 83 பேர் இருந்தனர். விமானம், ஓடுபாதையில் ஓட துவங்குவதற்கு முன்னதாக விமானத்தின் இயந்திரங்களை விமானி சரிபார்த்தார். அப்போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்ததை கண்டுபிடித்தார். இந்நிலையில், விமானத்தை இயக்கினால் பறக்கும்போது பிரச்னைகள் ஏற்பட்டு அசம்பாவித சம்பவம் நிகழலாம் என்று கருதிய விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனே, விமானத்தை இயக்க வேண்டாம் என்று தகவல் கிடைத்தது.