வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி 3 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும். 25 ம் தேதி கடலோர மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. 24,25 ஆகிய தேதிகளில் தென் தமிழகம், மாலத்தீவு கடற்பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: