சென்னை: வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் அக்டோபர் 22ம் தேதி நாடு தழுவிய ேவலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 40வது மாநில மாநாடு சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டை அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:மத்திய அரசு 10 பொதுத்துறை வங்கிகளை அதாவது, ஆந்திரா வங்கி, யுனைடெட் வங்கி, ஓரியண்டல் வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, யூனியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, கனரா வங்கி ஆகிய 10 வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக சுருக்க போவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த வங்கிகளை பெரும் வங்கிகளாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. வங்கிகளை இணைப்பதனால் நாட்டுக்கோ, பொருளாதாரத்துக்கோ, வங்கி துறைக்கோ, வங்கி வாடிக்கையாளருக்கோ எந்தவிதப்பயனும் ஏற்படாது. அதற்கு மாறாக வங்கிகளை இணைத்து பெரிய வங்கிகளாக மாற்றுவதால், பெரும் முதலாளிகளுக்கு கூடுதலாக கடன் கொடுக்கும் நிலை ஏற்படும். அதனால், வங்கிகள் தன்மைக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் அக். 22ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பேட்டி
- வங்கி ஊழியர்கள்
- வேலைநிறுத்தம்
- நாடு தழுவிய
- அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்
- நடவடிக்கை வங்கி ஊழியர்களை இணைத்தல்
- பொதுச்செயலர்