பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே இறந்த கோயில் காளைக்கு திரளான பொதுமக்கள் மாலை மற்றும் வேஷ்டி அணிவித்து அஞ்சலி செலுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கோவணூரில் பொன்னழகிஅம்மன் கலிங்கிக்கருப்பர் கோயில் உள்ளது இக்கோயிலுக்கு சொந்தமாக காளை வளர்க்கப்பட்டு வந்தது. கோவணூர் ஊர் மக்கள் பராமரிப்பில் இருந்து வந்த இந்த கோயில் காளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்த மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டில் பங்குபெற்று வெற்றி வாகை சூடிவந்தது.