கோவில்பட்டி: தீபாவளி பண்டிகைக்கு முன்பு ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் விற்பனையை நடைமுறைப்படுத்த துறை ரீதியாக அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்திலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு முத்து மாவட்டம் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் அனைத்து துறை சார்பில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்தும், என்னென்ன திட்டங்கள் உள்ளது எனவும் மக்கள் தெரிந்து கொள்ளலாம்.