கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு 3 ஆண் யானைகளும், சிறுமுகை வனப்பகுதியில் ஒரு யானையும் என மொத்தம் 4 யானைகள் மர்ம கும்பலால் வேட்டையாடப்பட்டு தந்தங்களை வெட்டி கடத்தப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனைத்தொடர்ந்து சீகூர் வனப்பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு யானைகளை வேட்டையாட முயற்சி செய்த தேனியை சேர்ந்த சிங்கம்(45), குபேந்திரன்(42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கடந்த 2016ம் ஆண்டு கல்லார் வனப்பகுதியில் யானைகள் புதைக்கப்பட்ட இடத்தை வனத்துறையினர் தோண்டி எலும்புக்கூடுகளை கைப்பற்றினர்.