களக்காடு: களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் வேதநாயகபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் மும்பையில் வசித்து வருகிறார். இவரது மனைவி காந்திமதி (48). காந்திமதி தனது மகன்கள் ரோபின் (26) மூபின் (24) ஆகியோருடன் வேதநாயகபுரத்தில் வசித்து வந்தார். கூலி தொழில் செய்து வந்தார். இவரது மகன்கள் கட்டிட தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காந்திமதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது அவர் மருத்துவ சிகிச்சை பெற அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் கந்துவட்டிக்கு பணம் கடனாக வாங்கியிருந்தார். இதற்கு வாரம்தோறும் வட்டி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. எனினும் கந்துவட்டி காரர்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு காந்திமதிக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவரை அவதூறாகவும் பேசியுள்ளனர்.