மும்பை: கடன் வட்டி குறைப்பு, இனி வரும் புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பின்னடைவாக உள்ளது பற்றி எச்சரிக்கை விடுத்த ரிசர்வ் வங்கி கவர்னர், நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு பட்ஜெட் செலவினங்களை திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். இதுபோல் குறுகிய கால கடன் வட்டி குறைப்புக்கான வாய்ப்புகள் உள்ளன என்றார். இந்நிலையில், வட்டி குறைப்பு பற்றி நேற்று அவர் கூறுகையில், வட்டி குறைப்பு தொடர்பான கொகை முடிவுகள், இனி வரக்கூடிய வளர்ச்சி தொடர்பான புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும்.