கிண்டி தொழிற்பேட்டையில் சிறு, குறு நடுத்தர தொழில் வணிகத்துக்கு புதிய கட்டிடம் : முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோ கூட்டமைப்பு கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்  வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பின் புதிய அலுவலக கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து, அதன் செயல்பாட்டினை துவக்கி வைத்தார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பானது, தமிழ்நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை பன்னாட்டு மயமாக்கிடவும், வெளிநாட்டு வர்த்தகர்களின் ஒத்துழைப்பை பெற்றிடவும், தமிழ்நாட்டில் முதலீட்டை ஈர்ப்பதையும் முக்கிய குறிக்கோள்களாக கொண்டு  செயல்படுவது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், தலைமை செயலாளர் சண்முகம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: