சென்னை: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் நிதியில் இருந்து ரூ.5 கோடியே 44 லட்சத்து 44 ஆயிரம் செலவில் பாதுகாப்பு உபகரணங்கள் கொண்ட பெட்டகத்தை 25,000 கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக, 7 தொழிலாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் வழங்கினார். பாதுகாப்பு காலணிகள், பாதுகாப்பு தலைகவசம், பளிச்சிடும் மேலங்கி, கையுறைகள் மற்றும் பாதுகாப்பு கண்ணாடி அடங்கிய இந்த பாதுகாப்பு உபகரணங்கள் கொண்ட ஒரு பெட்டகத்தின் மதிப்பு 2,177 ரூபாய். நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், தலைமை செயலாளர் சண்முகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலாளர் தீரஜ் குமார், தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.