சென்னை: தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு:சவூதி அரேபிய நாட்டில் ஜுபைலில் உள்ள முன்னணி மருத்துவமனைக்கு 35 வயதிற்கு உட்பட்ட டிப்ளோமா, பி.எஸ்.சி படித்த ஆண் செவிலியர்கள் மற்றும் 40 வயதிற்கு உட்பட்ட இரண்டு வருட பணி அனுபவமுள்ள பி.எஸ்.சி. படித்த ஆண் பிசியோதெரபிஸ்ட் பெருமளவில் தேவைப்படுகிறார்கள். மேலும் 40 வயதிற்கு உட்பட்ட பெண் லேப் ெடக்னிசியன், எக்ஸ்ரே டெக்னிசியன், சோனோகிரபி டெக்னிசியன் மற்றும் எம்.டி.தேர்ச்சியுடன் 60 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அனுபவத்திற்கேற்றவாறு மாத ஊதியம், இலவச விமான டிக்கெட், உணவுப்படி, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை மற்றும் சவூதி அரேபிய நாட்டின் சட்டத்திட்டத்திற்க்கு உட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்.