ஆலந்தூர்: ஆதம்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (45), ஆட்டோ டிரைவர். இவர், பள்ளி மாணவர்களை ஆதம்பாக்கம் நிலைமை நகர், நியூ காலனி ஆகிய பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தினசரி அழைத்துச் சென்று வருகிறார். பள்ளியில் தற்போது காலாண்டு தேர்வு நடைபெறுவதால், தேர்வு முடிந்ததும் மாணவர்களை மதியம் பள்ளியில் இருந்து அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று வந்தார். அதன்படி, நேற்று மதியம் பள்ளியில் இருந்து மாணவர்களை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். குன்றக்குடி நகர் அருகே சென்றபோது கதவு திறக்கப்பட்ட நிலையில் நின்றுகொண்டிருந்த கார் கதவில் எதிர்பாராத வகையில் ஆட்டோ மோதியது.