தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சிறப்பு அதிகாரியாக எம்.ஏ.சித்திக் நியமனம்

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சிறப்பு அதிகாரியாக நிதி துறை செயலாளர் எம்.ஏ. சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ஏ.கார்த்திக் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: வக்பு வாரிய சட்டத்தின்படி இந்த வாரியம் செயல்பட முடியாத சூழ்நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் உறுப்பினராக இருந்த ஏ.சிராஜுதீன், அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைவாக கொண்டு வாரியம் இயங்காமல் இருப்பது, தமிழ்நாடு வக்பு வாரிய சட்டத்துக்கு முரணானது.

எனவே வக்பு வாரியத்தை 6 மாதங்களுக்கு அரசு தரப்பில் சிறப்பு அதிகாரியை நியமித்து செயல்பட செய்ய கவர்னர் முடிவு செய்துள்ளார்.அதன்படி, தமிழக நிதித்துறையின் முதன்மை செயலாளர் எம்.ஏ.சித்திக் சிறப்பு அதிகாரியாக கவர்னர் நியமித்து உத்தரவிட்டுள்ளார். இந்த காலகட்டத்தில், தமிழ்நாடு வக்பு வாரிய சட்டத்தின் அடிப்படையில் அவர் அனைத்து அதிகாரத்தோடும் செயல்படுவார்.

Related Stories: