மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

சென்னை: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாள் 25ம் தேதி வரை சிபிஎஸ்இ நீட்டித்துள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இதன்படி சிபிஎஸ்இ பள்ளிகள், நவோதயா பள்ளிகள், கேந்திர வித்யாலயா பள்ளிகளில்,  மத்திய திபெத்திய பள்ளிகள் பணி நியமனம் பெற சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் மாதம் 8ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வு மொத்தம் 20 மொழிகளில்  எழுதலாம். நாடு முழுவதும் 110 நகரங்களில் இந்த தேர்வு நடக்கிறது.இந்த ேதர்வு எழுதுவோர் ஆகஸ்ட் 19ம் தேதி முதல் செப்டம்பர் 18ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினத்துடன் இந்த கால அவகாசம் முடிந்த நிலையில், 25ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து சிபிஎஸ்இ அறிவி–்த்துள்ளது. மேலும், தேர்வுக் கட்டணத்தை 30ம் தேதி வரை செலுத்தலாம் என்றும்  தெரிவித்துள்ளது.

Related Stories: