சென்னையில் எண்ணூர் துறைமுகத்துக்கு வரும் கனரக வாகனங்கள் எளிதில் வரும் வகையில் எல்லை சாலை திட்டம்: நெடுஞ்சாலைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்

சென்னை: எண்ணூர் துறைமுகத்துக்கு வரும் கனரக வாகனங்கள் எளிதில் வரும் வகையில் சென்னை எல்லை சாலை திட்டம் உருவாக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை எண்ணூர் துறைமுகத்தில் துவங்கி மாமல்லபுரம் அருகிலுள்ள பூஞ்சேரி சந்திப்பு வரை அமையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுக இணைப்பினை மேம்படுத்தும் பொருட்டு சிறந்த வணிக போக்குவரத்து சாலையாக உருவாக்கப்படவுள்ளதாகவும் இந்த பணிகள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்காக 12 ஆயிரத்து 301 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 42 புறவழிச்சாலை பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளதாகவும், 24 புறவழிச்சாலை பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைப்பெற்று வருவதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: