புதுடெல்லி: டெல்லி பெண்கள் ஆணையம் கூறிருப்பதாவது:டெல்லியை சார்ந்த 15 வயது சிறுமி தனது தாய் மற்றும் இரண்டாவது தந்தையுடன் வசித்து வந்தார். சிறுமியை அவரது தாய், நேற்று முன்தினம் பாதர்புரில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அங்கு செல்லாமல் நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு கூட்டிச்சென்றார். அங்கு சிறுமியை தங்கவைத்துவிட்டு வெளியில் வேலை இருப்பதாகவும், அங்கு செல்ல வேண்டும் என்றும் சிறுமியிடம் அவரது தாய் கூறியுள்ளார். அதோடு, ஷாகித் என்பவர் வந்து வீட்டுக்கு அழைத்துச்செல்வார் என்றும் சிறுமியிடமி கூறி அவரோடு செல்லுமாறு தெரிவித்துவிட்டு தாய் வெளியில் சென்றுவிட்டார். இதற்கிடையில் ஷாகித் என்பவர் வந்து சிறுமியை உடன் அழைத்து சென்றார். ஆனால், சிறுமியின் வீட்டிற்கு செல்லாமல் அவர் பாவனா கிராமத்தின் ஈஸ்வர் காலனியில் உள்ள தனது வீட்டிற்கு கூட்டிச்சென்றார். அங்கு ஏற்கனவே இருந்த சில பெண்கள், சிறுமியை கல்யாண உடையில் தயாராகுமாறு கூறியுள்ளனர்.