சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மக்கள் பயன்பாட்டுக்கு மின் வாகனங்கள்: மத்திய அமைச்சர் பேட்டி

சென்னை: சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மக்கள் பயன்பாட்டுக்கு மின்வாகனங்கள் விடப்படும் என்று மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் கூறினார். சென்னை விமான நிலையத்தில் மத்திய கனரக துறை இணையமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் உள்ள 64 பெருநகரங்களில் எங்களது துறை சார்பில் மின்சாரத்தில் இயங்கும் 5,595 வாகனங்களை பொதுமக்களின் பயன்பாட்டில் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வாகனங்கள் இயங்கும்போது கார்பன்டை ஆக்சைடு வெளியாகும் அளவு மிகக்குறைவாக இருக்கும். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும். எனவேதான், இந்த வாகனங்களுக்கு நாங்கள் முன்னுரிமை அளித்து, செயல்பாட்டுக்கு கொண்டு வருகிறோம். இவ்வாறு அர்ஜூன்ராம் மெக்வால் கூறினார்.

Related Stories: