தமிழக அரசு சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

சென்னை: தமிழக அரசு சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக அரசு சார்பில் அண்ணாவின் 111வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் சி.சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை செயலாளர் க.சண்முகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் கார்த்திக் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சங்கர், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) ரவீந்திரன், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: