சுபஸ்ரீ உயிர் இழந்த அதே பகுதியில் பேனரை அகற்றும் போது மீண்டும் விபத்து

சென்னை : சென்னையில் சுபஸ்ரீ உயிர் இழந்த அதே பகுதியில், பேனரை அகற்றும் போது ஊழியர் ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததால் விபத்து ஏற்பட்டதில் சுபஸ்ரீ  உயிர் இழந்தார். இதனால் சாலையோரங்களில் உள்ள பேனர்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் 60 அடி உயரம் உள்ள பேனரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டு வந்தனர். பேனரை அகற்றும் போது  ராஜேஷ் என்பவர் கீழே விழுந்தார். இதனையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Related Stories: