சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. இதுகுறித்து, வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட ஏராளமான அரியவகை விலங்குகள், பறவைகள் உள்ளன. இங்கு விலங்குகள் தொடர்பான கல்வி, விலங்கு பரிமாற்றம், அழிநிலையில் உள்ள விலங்குகள் காப்பாற்றப்படுகிறது. இந்திய உயிரியல் பூங்காக்களுக்கு முன்மாதிரியாக வண்டலூர் பூங்கா திகழ்கிறது.