ஜிடிபி மிகவும் மோசம் ஐஎம்எப் எச்சரிக்கை

வாஷிங்டன்: பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததைவிட மிக மோசமாக இருக்கிறது’ என்று இந்தியாவை சர்வதேச நிதி அமைப்பு (ஐஎம்எப்) எச்சரித்துள்ளது. வாஷிங்டனில் ஐஎம்எப் செய்தித்தொடர்பாளர் கெரி ரைஸ் கூறியதாவது: உலகப் பொருளாதாரம் குறித்தும், நாடுகளின் வளர்ச்சி குறித்தும் புதிய கணிப்புகளை சேகரித்து வைத்திருக்கிறோம் அந்த விவரங்களை வெளியிட இருக்கிறோம். இவற்றில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் பலவீனமாக இருக்கிறது. படுமோசமான கட்டத்தை எட்டி கொண்டிருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள், பொருளாதார சுற்றுச்சூழலை ஒழுங்குபடுத்துவதில் உறுதியற்ற தன்மை நிலவுகிறது, வங்கி அல்லாத தனியார் நிதி நிறுவனங்கள் பலவீனமான நிலையில் இருப்பதும் இந்தியாவின் பொருளாதார சரிவுக்கு காரணம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆனாலும், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த இடத்தில், உலக அளவில் இந்தியா இன்னும் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஐஎம்எப் தொடர்ந்து கண்காணிக்கும் இவ்வாறு ரைஸ் கூறினார்.

இந்தியாவின் நடப்பு நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி விகிதத்தின் கணிப்பை 7.03 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் ஐஎம்எப் குறைத்துள்ளது. 2021-ம் ஆண்டில்தான் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.3 சதவீதமாக வளர்வதற்கு வாய்ப்புள்ளது என ஐஎம்எப் கணித்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5 சதவீதமாகக் குறைந்ததால், ஐஎம்எப் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கணிப்பை மாற்றியுள்ளது. என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

* இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதம், 2019-20 நிதியாண்டில் முதல் காலாண்டில் 5 சதவீதம் என்ற அளவிற்கு குறைந்துள்ளது. இது, கடந்த 6 ஆண்டுகளில் இருந்ததைவிட குறைவாகும்.

* 3019 மற்றும் 2020ம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் குறைவாகத்தான் இருக்கும் என்று ஐஎம்எப் கூறியுள்ளது.

Related Stories: