சென்னை: தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக வெயில் நீடித்து வருகிறது. அதனால் வெப்ப சலனம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. கரூரில் அதிகபட்சமாக நேற்று 100 டிகிரி வெயில் கொளுத்தியது. பாளையங்கோட்டை 99 டிகிரி, சேலம், திருத்தணி 93 டிகிரி, தூத்துக்குடி, திருச்சி, மதுரை, சென்னை 95 டிகிரி வெயில் நிலவியது.நேற்று வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகி கடலோரத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று மழை பெய்தது. அதிகபட்சமாக தேவாலா, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, வேலூர் 70 மிமீ பெய்துள்ளது.