சென்னை: மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் 268 பயணிகளுடன் நேற்று காலை 7.40 மணிக்கு சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அதில், தான்சானியா நாட்டைச் சேர்ந்த செல்மன்ஜெனி (35) உள்பட 4 சுற்றுலா பயணிகளும் அடங்குவர். அப்போது, செல்மன்ஜெனிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே பணிப்பெண்களிடம் இதுபற்றி தெரிவிக்கப்பட்டது. அவர்கள், முதலுதவி சிகிச்சை அளித்தனர்.பின்னர் விமானிக்கு தகவல் கொடுத்தனர். உடனே விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, பயணிக்கு ஏற்பட்ட நிலையை விளக்கி கூறினார்.