சூலூர்: கோவை சூலூர் அருகே கண்ணம்பாளையம் ஸ்டாலின் நகரில் வசிப்பவர் ஆனந்த்(35). இவர், அதே பகுதியில் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் மயிலாடுதுறை. மனைவி செல்வி அங்கு இருந்தார். செல்வியின் தங்கை தமிழ்ச்செல்வி (27) திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழ்ச்செல்வி அக்காள் கணவர் ஆனந்துடன் ஸ்டாலின் நகரில் வசித்து வந்துள்ளார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் கடந்த 6ம் தேதி பிரசவத்திற்காக ஆனந்த் சூலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், தமிழ்ச்செல்வி இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து அவரின் உடலை மயிலாடுதுறை கொண்டு செல்ல பணம் இல்லை. இதையடுத்து ஆனந்துடன் பணிபுரியும் செல்வி என்பவர் தனக்குத் தெரிந்த உறவினர் ஒருவருக்கு திருமணமாகி 15 ஆண்டாக குழந்தை இல்லை.