ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் நேற்று காலை மழைக்காக, மேகங்கள் கடல் நீரை உறிஞ்சும் காட்சியை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் மொபைலில் படம் பிடித்தனர்.மழைப்பொழிவிற்காக கடல் மற்றும் ஏரியில் இருந்து நீரை மேகங்கள் உறிஞ்சி எடுப்பதும், மேகங்களில் சேகரிக்கப்படும் நீர் பின்னர் மழையாக பொழிவதும் இயற்கை. ஆனால் இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்ப்பது மிகவும் அபூர்வம். ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி, பாம்பன் கடல் பகுதியில் மேகங்களால் நீர் உறிஞ்சப்படும் நிகழ்ச்சி அவ்வப்போது நடைபெறுகிறது.தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் நேற்று நடைபெற்ற இதுபோன்றதொரு காட்சியை சுற்றுலாப்பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தனர்.