புதுடெல்லி: தென்னாபிரிக்க கிரிகெட் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட்கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை தேர்வுக்குழு அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் டி-20 போட்டி தர்மசாலாவில் வரும் 15ம் தேதியும், 2-வது போட்டி மொகாலியில் 18ம் தேதியும், 3-வது போட்டி பெங்களூருவில் 22ம் தேதியும் நடக்கிறது. டி-20 போட்டிக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், முதல் டெஸ்ட் அக்டோபர் 2ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 2வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10ல் புனேவிலும், 3வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் அக்டோபர் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி வீரர்களை எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழு டெல்லியில் இன்று கூடி தேர்வு செய்தது. இதையடுத்து தற்போது, டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.