புதுடெல்லி: தடையில்லா வர்த்தக உடன்பாடு செய்துள்ள நாடுகளில் (எப்டிஏ) இருந்து வரி இல்லாமல் உருக்கு இறக்குமதி கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில் 67 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் 2018 ஏப்ரல் - ஜூலை வரையிலான காலத்தில் உருக்கு இறக்குமதி 58 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது. கடந்த ஏப்ரலில் மொத்தம் 5,86,000 டன்களாக இருந்த இறக்குமதி, ஆகஸ்ட் இறுதியில் 8,56,000 டன்களாக அதிகரித்தது. தடையில்லா வர்த்த உடன்பாடு செய்துள்ள நாடுகலில் இருந்து உருக்கு இறக்குமதி அதிகரித்தது என்பது உண்மையில் பெரும் பதட்டத்தை ஏற்படு–்ததி உள்ளது என்று ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் ஷேஷகிரி ராவ் தெரிவித்தார். பிராந்திய விரிவான வர்த்தக ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பில் சீனா சேர உத்தேசித்து இருப்பது உருக்காலை நிறுவனங்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.