இடைநிற்றல் மாணவர்களின் விவரங்களை சேகரித்து EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: இடைநிற்றல் மாணவர்களின் விவரங்களை சேகரித்து EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொது தொகுப்பில் உள்ள மாணவர்களின் விவரங்களை வைத்து இடைநிற்றல் மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என அறிவித்துள்ளது. பள்ளி விட்டு வேறு பள்ளி சென்ற மாணவர்களின் விவரங்களையும் சேகரித்து புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Related Stories: