சித்தூர்: சித்தூர் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற கோலாரை சேர்ந்த 6 சிறுவர், சிறுமியர் ஏரியில் மூழ்கி இறந்தனர். கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், கேசம்பல்லி பஞ்சாயத்து, மரப்பக்கட்டா கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் விநாயகர் சதுர்த்தியையொட்டி தங்களது பகுதியில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். அவற்றை, சித்தூர் மாவட்டம் வி.கோட்டா மண்டலம், கர்நாடகா- ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் உள்ள ஏரியில் கரைக்க ஊர்வலமாக கொண்டு சென்றனர். ஏரியில் இறங்கி சிலையை கரைத்தபோது 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அவற்றை காப்பாற்ற மேலும் 3 பேர் ஆற்றில் குதித்தனர்.