அரூர் சார்பு நீதிமன்ற நீதிபதி சஸ்பெண்ட்: ஐகோர்ட் பதிவாளர் உத்தரவு

சென்னை: விபத்து வழக்கு விவகாரத்தில் சிக்கிய அரூர் சார்பு நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர கண்ணாவை சஸ்பெண்ட் செய்து உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் அரூர் சார்பு நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருபவர் ராஜேந்திரா கண்ணா. இவர், கடந்த ஆண்டு, சங்ககிரி மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வந்தார். அப்போது நாமக்கல் அருகே, இவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. அதில், இவரது கார் மோதி ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் உயிர் இழந்தவரின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், நீதிபதி ராஜேந்திர கண்ணாவையும் சேர்க்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து நாமக்கல் இன்ஸ்ெபக்டர், நீதிபதி ராஜேந்திர கண்ணா மீது வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதால், அரூர் நீதிபதி ராஜேந்திர கண்ணாவை சஸ்ெபண்ட் செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு நகலை தர்மபுரி முதன்மை செஷன்ஸ் நீதிபதி, அரூர் நீதிபதியிடம் நேற்று வழங்கினார்.

Related Stories: