மதுரை: சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்திற்காக 2வது இடத்தை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது. மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் தூய்மையான புனித தலங்களை உருவாக்கும் முயற்சியில் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 10 புனித தலங்கள் தேர்வு செய்யப்பட்டு மதுரை மாநகராட்சியுடன் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் இணைந்து தூய்மை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சுவட்ச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த தூய்மை பராமரிப்பிற்கான இடங்களுக்கு கடந்த வாரத்தில் ஜல்சக்தி அமைச்சகம் விருதுகளை வழங்கியிருந்தது. அதில் தூய்மை பராமரிப்புகளுக்கு 2வது இடமாக மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு செய்யப்பட்டு மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் கடந்த சனிக்கிழமை பெற்றுக்கொண்டார்.