சென்னை: வேலூர், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது லேசான மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே மழை பெய்வது போன்று அவ்வப்போது கருமேகங்கள் சூழ்ந்து இதமான சூழல் காணப்படுகிறது. சென்னையை பொறுத்தமட்டில் காலையில் வெயில் வறுத்தெடுக்கும் நிலையில், மாலையில் மேகம் சூழ்ந்து காணப்படும். ஆங்காங்கு லேசான மழையும் பெய்கிறது. இந்நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.