அண்ணாநகர்: கோயம்பேடு பகுதியில் வீடுகளில் புகுந்து செல்போன் திருடிய மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோயம்பேடு பகுதியில் உள்ள வீடுகளில் தொடர்ச்சியாக செல்போன்கள் திருடுபோவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கோயம்பேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தீபக்குமார் தலைமையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், கோயம்பேடு அன்பு நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து செல்போனை திருட முயன்ற 2 சிறுவர்களை, வீட்டின் உரிமையாளர் சுற்றிவளைத்து பிடித்து கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், பிடிபட்டவர்கள் 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்று தெரியவந்தது.