பிரதமர் மோடி ஆட்சியின் வளர்ச்சி இல்லாத 100-வது நாள் நிறைவுக்கு வாழ்த்து: ராகுல்காந்தி ட்வீட்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் வளர்ச்சி இல்லாத 100-வது நாள் நிறைவுக்கு வாழ்த்து என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் 2-வது முறையாக வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் பாஜக  ஆட்சியை பிடித்தது. பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்றார். இன்று மோடி தலைமையில் பா.ஜ.க அரசு மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்து 100 நாள்கள் நிறைவடைந்துள்ளது.

மோடி அரசுக்கு எனது வாழ்த்துகள். ஆனால், எந்த வளர்ச்சியும் இல்லை. ஜனநாயகம் வீழ்த்தப்பட்டதும், விமர்சனத்தை தவிர்க்க ஊடகங்கள் மீதான கூடுதல் அடக்குமுறையும் நடக்கிறது. சரியான திட்டமிடலும், பணமும் தேவைப்படும் நிலையில், அது இல்லாத தலைமையும், பொருளாதார சூறையாடலும் தான் தற்போது நடக்கின்றன இவ்வாறு அந்த பதிவில் ராகுல் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories: