தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுவதாவது; பரவலாக லேசான மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களிலும் புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 செ.மீ. மழையும், கூடலூர் பஜார் மற்றும் சின்னக்கல்லாரில் தலா 3 செ.மீ., பொள்ளாச்சி, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, உள்ளிட்ட இடங்களில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

Related Stories: