புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுவிட்சர்லாந்து செல்லவுள்ள விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அனுமதி கேட்ட நிலையில் பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளதாக பாக். அமைச்சர் குரேஷி தகவல் அளித்துள்ளதாக ஏ.எப்.ஐ தெரிவித்துள்ளது. வருகிற செப்டம்பர் 9ம் தேதி குரியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சுவிட்சர்லாந்துக்கு செல்லவுள்ளார். அதற்காக பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்குமாறு பாகிஸ்தான் அரசிடம் இந்தியா கோரிக்கை வைத்தது. இந்த நிலையில், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை விதித்துள்ளது. தற்போது காஷ்மீரில் நிலவும் பதட்டமான சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.