சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மாலை நேரத்தில் மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. வடபழனி, கோயம்பேடு, சூளைமேடு, ராயப்பேட்டை, வளசரவாக்கம், கோடம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, வானகரம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கியதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழையால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் அபாய அளவை தாண்டி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.