சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, லண்டனில் உள்ள சர்வதேச புகழ் பெற்ற கீவ் தாவரவியல் பூங்காவினை நேற்று பார்வையிட்டார்.தமிழ்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, லண்டனில் உள்ள சர்வதேச புகழ் பெற்ற கீவ் (KEW) தாவரவியல் பூங்காவினை பார்வையிட்டு தமிழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காக்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பல்வேறு நாடுகளின் அந்தந்த பருவகாலங்களில் வளரும் பூச்செடிகள், காய்கறிசெடிகள், மற்றும் பலவகையான தாவரங்கள் இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘கீவ்’ தாவரவியல் பூங்காவில் அந்தந்த தாவரங்களுக்கு ஏற்ற காலநிலையை செயற்கையாக ஏற்படுத்தி உலகமே வியக்கும் வண்ணம் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.