மாதவரம்: மாதவரம் அருள் நகரை சேர்ந்தவர் அமுதா. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பதிவேடு அலுவலராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் வினோத்குமார் (26), கடந்த 15ம் தேதி மாதவரம் தனியார் கல்லூரி அருகே பைக்கில் சென்றபோது, வேகத்தடை மீது பைக் வேகமாக மோதியதால் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நேற்று முன்தினம் மூளைச்சாவு ஏற்பட்டது.