சென்னை: 99 சதவீதம் பேர் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் குறிப்பிட்ட தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்தலாமா என டிஆர்பி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுக்கு 4 மாதங்களுக்கு முன் அறிவிக்கை வெளியிடப்பட்டு, அவசர அவசரமாக டெட் தேர்வு ஜூன் 8,9ம் தேதிகளில் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 80 ஆயிரம் பேர் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை வேலை கிடைக்காமல் உள்ளனர். இந்நிலையில் குறிப்பிட்ட தேர்வால் வேலை கிடைக்காது, மேலும் ஒரு தேர்வை எழுத வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒப்பிடும்போது, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் உடனடியாக வேலை கிடைக்காது என்ற நிலை மாணவர்கள் மத்தியில் ஏற்கனவே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டெட் முதல் தாளுக்கு 1.62 லட்சம் பேரும், டெட் இரண்டாம் தேர்வுக்கு 3.79 லட்சம் பேரும் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.