சென்னை: வருகிற 1ம் தேதி குரூப் 4 தேர்வு நடக்கிறது. 6491 பதவிக்கு 16.30 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் (குரூப் 4 பதவி) அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) 397 பணியிடங்கள், இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) 2688, தட்டச்சர், இளநிலை உதவியாளர் (பிணையம்)-104.வரிதண்டலர் (கிரேடு 1)-34, நில அளவர்-509, வரைவாளர்-74, தட்டச்சர்-1901, சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3)-784 என மொத்தம் காலியாக உள்ள 6491 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் 14ம் தேதி அறிவித்தது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 14ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சிதான் கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினியரிங் படித்தவர்கள் என போட்டிப்போட்டு கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தனர். மொத்தம் 16.30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.