சூளகிரி: பேரிகை அருகே குற்றவாளியை கைது செய்ய வந்த இடத்தில் கர்நாடக போலீசார் மீது சரமாரி தாக்குதல் நடத்தியதில், ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே தீர்த்தம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(35). இவர், பெங்களூருவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கர்நாடக மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்பேரில், பொம்மனஅள்ளி போலீசார், சங்கரை பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் எஸ்ஐ மஞ்சுநாத் தலைமையில் 4 போலீசார், தீர்த்தம் பகுதிக்கு விரைந்தனர். பின்னர், அங்கிருந்த சங்கரை சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றனர்.