தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு; தமிழக டிஜிபி மறுப்பு

கோவை: தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியானது. பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் ஏதும் வெளியிடவில்லை என்று தமிழக டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், இலங்கை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இவர்கள் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் என்றும் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையம், ரயில் நிலையங்கள், மற்றும் பேருந்து நிலையங்களில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஊடுருவியிருப்பதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியானது. இதற்கு தமிழக டிஜிபி திரிபாதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

தீவிரவாதிகள் ஊடுருவலால் பாதுகாப்பை அதிகரிக்க கூறிய தகவல் உண்மை தான் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இரவு முதல், சிறப்பு வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related Stories: