மண்டபம்: மண்டபம் முகாமில் போலீஸ் பாதுகாப்பில் தங்கியிருந்த தம்பதி, 4 குழந்தைகளுடன் மாயமானது குறித்து தனி துணை தாசில்தார் போலீசில் புகார் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில், 350க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1,700க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அகதிகளை சந்திக்க விரும்பும் உறவினர்கள் தனித்துணை ஆட்சியரிடம் முறையான அனுமதி பெற வேண்டும். வெளியூர் செல்ல விரும்பும் அகதிகள் போலீசார், தனித்துணை ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று செல்ல வேண்டும். இந்நிலையில், இலங்கை, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த உதயகலா, தயாபரராஜ் தம்பதியினர் 3 பெண் குழந்தைகளுடன் விமானம் மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்தனர். இவர்களுக்கு விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, மண்டபம் அகதிகள் முகாமில் தங்கிய இவர்களது குடும்பத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.