மைசூரு: ஐஎன்எக்ஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளதின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் கிடையாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். மைசூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஐஎன்எக்ஸ் முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை எதுவுமில்லை. புகார் வரும் பட்சத்தில் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட தன்னாட்சி சுதந்திரத்துடன் இயங்கிவரும் விசாரணை அமைப்புகள் சம்மந்தப்பட்டவரை கைது செய்து விசாரணை நடத்துவது புதியதல்ல. நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியம் உள்ளதாக கூறிக் கொள்ளும் காங்கிரஸ் தலைவர்களுக்கு இது தெரியாதா அல்லது தெரிந்தும் தெரியாதாதது போல் உள்ளார்களா?