ஆவடி: புழல் ஏரிக்கு தண்ணீர் வரும் கிருஷ்ணா கால்வாயில் ஆவடி பகுதியில் கழிவுநீர் விடப்படுகிறது. ஆந்திரா மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திருவள்ளூர் அருகே பூண்டி ஏரிக்கு தண்ணீர் வருகிறது. பின்னர், இங்கிருந்து செவ்வாப்பேட்டை, பாக்கம், வெள்ளானூர், அரிக்கமேடு, செங்குன்றம் வழியாக கிருஷ்ணா கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இந்த ஏரியில் உள்ள நீரை சுத்திகரித்து சென்னை மாநகர பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் புழலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு வரும் கிருஷ்ணா கால்வாயில் பல இடங்களில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விடப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஆவடி அருகே பாக்கம், வெள்ளானூர், அரிக்கமேடு, செங்குன்றம் பகுதிகளில் கால்வாய் ஒட்டியுள்ள வீடுகளில் இருந்து நேரடியாக கழிவுநீர் விடப்படுகிறது.